tamilnadu

img

கர்நாடகத்தில் கார்கள் மோதி தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் பலி

தும்கூர்,மார்ச் 6-  கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே கார்கள் மோதிய விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் பலியாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே  சீக்கனப் பள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 13  பேர், கர்நாடக மாநிலம் தர்மஸ்தாலாவில் கோவிலு க்கு சென்றுவிட்டு, வெள்ளி யன்று காரில் ஊருக்கு வந்துகொண்டிருந்தனர். கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் குனிகல் தாலு காவிலுள்ள ஆவரைக்கல் அருகே  பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளி யன்று அதிகாலை 2.30 மணிய ளவில் கார் வந்தது.அப் போது, மறுபக்க சாலையில் எதிர்திசையில் இருந்து வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே  மீடியனை கடந்து வந்து மோதியது. இந்த  விபத்தில் கிருஷ்ண கிரி மாவட்டத்தை சேர்ந்த காரில் பயணித்தவர்களில் ஒரு வயது குழந்தை உள்ளிட்ட 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அக்காரில் இருந்த மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். அதில் குழந்தை ஒன்று கவ லைக்கிடமான நிலையில் உள்ளது. விபத்து ஏற்படுத்திய காரில் வந்த பெங்களூரைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்தி லே உயிரிழந்தனர்.  இந்த விபத்தில் பலி யான கிருஷ்ணகிரி மாவட் டத்தை சேர்ந்த 10 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 1 லட்சம் ரூபாயும், காயம டைந்தோருக்கு தலா 50 ஆயி ரம் ரூபாயும் வழங்க முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

;